Wednesday, June 22, 2011

கவிதை எழுதுவது எப்படி - A complete Guide (Part-2)



சில நேரத்துல சீரியசாகவும் கவிதை எழுதணும்....

Task : நைட் 8 மணிக்கு, பீச் பக்கதுல ஒரு பெண்ணை பார்த்தேன், செம பிகர்,அவள பாத்துடே இருக்கும்போது, டக்குனு மழை பேய ஆரம்பிச்சுட்டு ...இதை எப்படி கவிதையா எழுதுறது!!!!....இத போய் எப்படி கவிதையா எழுதுறதுன்னு யோசிச்சா கவித வராது...காத்துதான் வரும்...மணி ரத்னம் படம் எடுக்றார் ...இது அப்புடிஅது இப்படின்னு யோசிச்சா எடுக்குறார்....சும்மா போற போக்குல...பழைய ராமாயனத்த இங்கிலீஷ் டயலாக் போட்டு மூணு மணி நேரம் ஒட்டல...அப்படிதான்!!!!!

அலுவலக துக்கம் முடிந்தும்...
ஆறுதலான தூக்கமும் வருவதற்கு
இடையிலான
இனிய நேரம்......
கடல் மணலை
அலை வறுட பார்த்திருக்க, என்
மனம் வறுட காத்திருந்தாள்,அவளால்
வருடப்பட்ட மனம்
நெருடபட்ட கணம்
கடற்கரை காற்றை மீறி
உயிர், உடல் கரை தாண்டி
அவள் வழி செல்ல
அவள் விழியோ
என் மன கேள்விகளுக்கு
விண் வழி பதில்சொல்ல தொடங்கியது, மழையாக

Simply,
Thiru

Tuesday, June 21, 2011

How to Write Kavithai - A Complete Guide by Thiru (Part-1)




காதல் சோகத்த அப்படியே போகிற போக்குல எப்படி கவிதையா சொல்றது??.... இப்ப பாக்கலாம்

இப்போ ஒரு பொண்ண propose பண்றீங்க, நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்ல, நீதான் என் உயிர் அப்டி, இபுடின்னு சொல்லி, கடைசில அந்த பொண்ணு, "இல்ல சார் என்னக்கு ஏற்கனவே கல்யாணம் fix பண்ணிட்டாங்க" சொல்லிடுச்சு.......இந்த சோகத்த எப்படி கவிதையா சொல்வது....
...............
அன்பே ஆருயிரே
உன் முன்பே என் உயிரே
சிரித்தாய்...
விழுந்தேன்...
முறைத்தாய்...
வழிந்தேன்...
அழைத்தாய்...
மகிழ்ந்தேன்...
வெண்மேகம் மறைக்கும் நிலா
முன்ஏதும் இல்லாதது போல்
முன் வந்து கொல்லாமல் கொன்றது..
உயிர் என் உள்ளிருந்து எழுந்து
உயிரே, உயிர் நீதான் என்றது..
சொல்ல கேக்காமல் உன்னிடம் சென்றது....
உன்னகும் எனக்கும் பந்தம் நிகழ்ந்தால்
உன்னையும் சேர்த்து,
என் உயிரும் எனக்கு சொந்தம்.....
அனைத்தையும் புரிந்து
தன்னை மறந்து
என் காதலை ஏற்பாள்
தன் மனம் கலக்க,
என் மனம் திறந்து காமி" என சொல்வாள் என நினைத்தேன்...
அல்ரடி கமிட் ஆயிட்டேன்
ஆள விடுறா சாமி" என சொல்லிவிட்டாள்

Thanks,

Simply,
Thiru

Saturday, June 18, 2011

Managers' Words & Its Translations......


# I Will not be reachable, drop a mail if urgent..
இன்னும என்ன காண்டக்ட் பண்ணணும்ன www.pichumani.com ல பாருங்க...

# A new trainee is coming to our department...
அடிமை சிக்கிடுச்சு...

# U are working hard, I accept that..but management point view it is not up to the expectations...
இங்கதான் இதுக்கு பேரு பஸ்சு ....துபாய்ல இதுக்கு பேரு குப்ப லாரி...

# he is very mush sophisticated...
நமக்கு வாய்த்த அடிமை மிகவும் புத்திசாலி...

# I'm an expert in this subject & U can ask me anything, anytime!!!
நான் ரெடினு சொல்றப்ப...எந்த சைடுலேந்து வேணாலும் அட்டாக் பண்ணுங்க...

# You are working hard, but the outcome is poor..
நீ புடுங்கறது எல்லாமே தேவைஇல்லாததுதான்........

# I don't want to see anyone in front of my table...
அடிச்சாசுல...இனிமே ஒரு பய இங்க நிக்க கூடாது.....

# U have to still work hard & satisfy us, to get high Increment
பரிசு!!...என்னிடம்!!!!.....பாடும்!!!.....பாடி தொலையும்........

# What is the harmonic distortion of an active front end regenerative drive as per IS standards??
தட்டானுக்கு சட்டை போட்டால், மொட்டை பையன் மட்டையால் அடிப்பான், அவன்
யார்?

# see... this software is excellent....
ஹே.. கர்வாட்...(singaravelan)

Thanks for Reading,

Simpy,
Thiru

அவன்-இவன் - Movie Review



இப்படி ஒரு கதை களம் அமைக்க பாலாவால் மட்டுமே முடியும், இவரின் படத்தில் மட்டும் கதாபாத்திரங்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிப்பதைவிட ....வித்தியாசமான மனிதர்களையும், அந்த மனிதர்களின் வித்தியாசப்பட்ட சூழலையும் கதாபாத்திரமாக அமைப்பது ப...ாலாவின் special. ஒரு மலை கிராமம், விஷால் (வால்ட்டர்), ஆர்யா (கும்புடுற சாமி), g .m.குமார் (highness), r .k (பிச்சைக்கார வில்லன்),, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு ஹீரோயின்கள் (பெயர் தெரியவில்லை) இவர்களை சுற்றிய கதை. யாருமே எதிர்பார்க்காத முறையில் என்ட்ரி தரும் விஷால், எந்த ஹீரோயிசமும் இல்லாமல் நடித்திருக்கும் ஆர்யா இருவரும் திருடர்கள், அதிலும் ஆர்யா பலே திருடன், G.M குமார் அவர்களின் ஜமீன் highness , இருவருமே highness மிக நெருக்கமானவர்கள், தன்னை மகனாக நினைக்கும் highness கொடுரூமாக கொலை செய்யப்படும்போது சீறுபவர்களே இந்த அவன் இவன்.

மசாலாவுகுள் விழுந்த விஷாலுக்கு இது once in the life படம், திருட முடியாமல் தவிப்பதும், ஆர்யாவின் கேலி பேசுக்கு குருமுவதும் ,போலீஸ் constable பெண்ணை சைட் அடிப்பதும், கோவம் வந்தால் தன்னுடைய ஆறு அடி கையால் எதிரியை விளாசுவதுமாக பிண்ணி எடுத்திருக்கிறார். கண்களை குவித்து வைத்து நடித்திருப்பதை தனியாக சொல்ல தேவையில்லை. highness கொலை செய்து தொங்க விட பட்டிருக்கும் மரத்தில் ஏறும்போதும், அவிழ்த கையிற்றை பிடிகாமுடியாமல் தானும் தண்ணீரில் குதிக்கும் போதும் "அட" போட வைக்கிறார். ஆர்யா காமெடிக்கு மாறுமே அதிக நேரம் செலவிடுகிறார், highness ஆகா வரும் குமார் முதற் பாதியில் ஏன் வருகிறார் அன்று தெரியாமல் இருக்கும்போது, இரண்டாம் பாதியில்அவரை சுற்றிதான் படமே என்று ஆகிறது, இரண்டாம் பாகத்தில் இதுவரை தமிழ் படங்களில் யாரும் செய்யாததை இவர் செய்திருக்கிறார்.

வழக்கமான பாலா படங்களை போல முதல் பாதி காமெடியாக செல்வதும், காவல் துறையை காமெடி துறையாக காட்டுவதும் இதிலும் உண்டு. முதல் பாதியின் காமெடி வசனங்களால் படம் நகர்கிறது ஆனால் படம் ஆரம்பித்து சரியாக 1 .38வது நிமிடம் தன்னுடைய கதாநாயகன் எப்படி பட்டவன் என்பதை பாலா காட்டும்போது அரங்கம் முதல் முறையாக அமைதியாகிறது. அந்த காட்சியில் திரையும் காண்பிக்கப்படும் ஆச்சர்ய முகங்களோடு அரங்கத்தில் இருந்தவர்கள் முகமும் மாறுகிறது. சூர்யா இதில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார், மைக் கிடைத்தால் வள வள என்று பேசும் சூர்யா இதில் அளவாக பேசுகிறார், பாலா என்பதாலோ என்னவோ!

ஆர்தத்ர் வில்சனின் ஒளிபதிவு உலக தரம், பசுமையான மலைகிராமம், இரவில் பெய்யும் மழை, கிளைமாக்ஸ் நடக்கும் சதுப்பு நில காட்சிகள் கூடுதல் பலம். இசை யுவன் ஷங்கர் ராஜா. தனியாக பாடல்கள் டூயட் இல்லாதது படத்தின் plus point . அதுவும் சில காட்சிகளில் பின்னணி இசையில் இளையராஜா இசை அமைத்திருகிராரோ என என்ன தோன்றும்.

அனால் கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து, காலையில் shoe போட்டு, டக் இன் பண்ணி ஆபீஸ் போகும் சிலரையே பெண்கள் திரும்பி கூட பார்க்காத நிலையில், திருடர்களை எப்படி பெண்கள் லவ் பண்ணுகிறார்கள் என்பதில் பெரிய லாஜிக் ஓட்டை. அதிலும் ஒரு பெண், போலீஸ் கான்ஸ்டபிள். மேலும் highness ஏன் தனியாக வாழ்கிறார், அவருக்கும் அந்த judgeகும் என்ன நடந்தது, குடியும் கும்மாளமுமாக இருக்கும் highness ஏன் மாடுகளை விற்கும் பிச்சைகாரனிடம் திடீரென வம்புக்கு போக வேண்டும் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். முடிவாக உறவுகள் பிரிவதும், பிரிக்கபடுவதால் எழும் உணர்ச்சியின் அழுத்தமான வெளிப்பாடே அவன்-இவன்

Next National Award for best actor will surely come to tamil cinema.

Thanks for Reading,

Simply,
Thiru